‘திரிஷ்யம் 3’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?

மலையாள திரைப்படங்களில் நடிகர் மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களையும் இயக்கிய இயக்குநர் ஜீத்து ஜோசப், தற்போது அந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்த தொடரின் முந்தைய பாகங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மூன்றாம் பாகத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில், திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படத்தை ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக முன்பே படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த காலகட்டத்தில் திரைப்படத்தை வெளியிட்டால் வசூல் மற்றும் வணிகம் பாதிக்கப்படலாம் என்ற காரணத்தால், வெளியீட்டு தேதியை மாற்ற தீர்மானித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் புதிய வெளியீட்டு தேதியை ஆலோசித்து வருவதாகவும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading