‘து யா மெய்ன்’ என்ற பாலிவுட் படத்தை பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்!

பாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகியுள்ள சர்வைவல் த்ரில்லர் திரைப்படமான ‘து யா மெய்ன்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குநர் பெஜோய் நம்பியார் இயக்கியுள்ளார். இதில் ஷனயா கபூர் மற்றும் ஆதர்ஷ் கவுரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விறுவிறுப்பான கதை சொல்லல் மற்றும் பதட்டமான காட்சிகளால் படம் கவனம் பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் தென்னிந்தியாவில் நடைபெற்றது. அதில் பிரபல இயக்குநர் மணிரத்னம் கலந்து கொண்டு படத்தை பார்வையிட்டார். பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், “பெஜோய் நம்பியார் இந்த திரைப்படத்தில் தனித்துவமான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தை திரையரங்கில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவத்தையும் உணர முடியும்,” என்று பாராட்டினார்.

சிறப்பு காட்சிக்குப் பிறகு பலரும் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளனர். திகில் நிறைந்த காட்சிகள், உணர்ச்சி மிக்க தருணங்கள் மற்றும் வலுவான கதை அமைப்பு ஆகியவை இப்படத்தின் முக்கிய பலங்களாக குறிப்பிடப்படுகின்றன. இந்த அம்சங்களே திரைப்படத்தை பார்வையாளர்களிடம் சென்று சேரச் செய்துள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading