மலையாள திரைப்பட உலகில் குறிப்பிடத்தக்க பெண் இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்பவர் கீது மோகன்தாஸ். இவர் இதற்கு முன்பு ‘மூத்தான்’ என்ற திரைப்படத்தை இயக்கி கவனம் பெற்றிருந்தார். அந்த படத்தின் மூலம் தனித்துவமான கதைக்களத்தையும், காட்சிப்படுத்தும் முறையையும் வெளிப்படுத்திய இவர், தற்போது இந்திய அளவில் பேசப்படும் மிகப்பெரிய திட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது பான் இந்தியா நட்சத்திரமாக விளங்கும் யஷ் முன்னணி கதாபாத்திரமாக நடிக்கும் ‘டாக்சிக்’ திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெறும் வகையில், மிகப்பெரிய அளவில் இந்த ‘டாக்சிக்’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பல மொழிகளில் வெளியிடும் நோக்கத்துடன், பரந்த வரம்பில் இந்தப் படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் ‘டாக்சிக்’ திரைப்படத்தைத் தொடர்ந்து கீது மோகன்தாஸ் இயக்க உள்ள அடுத்த திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளையும் தற்போது தொடங்கி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய படம் முழுக்க முழுக்க பெண்ணை மையக் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் ‘டாக்சிக்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள கியாரா அத்வானியை மீண்டும் இந்த புதிய திட்டத்தில் நடிக்க வைக்க இயக்குநர் தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
