‘கென்னடி’ திரைப்படம் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியது – நடிகை சன்னி லியோன்!

ஹிந்தி திரையுலகில் இயக்குநர் அனுராக் காஷ்யப் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘கென்னடி’. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடமிருந்து பாராட்டுகளை பெற்ற இந்த படம், வரும் 20 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ராகுல் பட், சன்னி லியோன், மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து நடிகை சன்னி லியோன் கூறியதாவது: “இந்த திரைப்படம் ஒரு நடிகையாக என்னை முற்றிலும் வேறுபட்ட உணர்ச்சி உலகிற்குள் அழைத்துச் சென்றது. இதில் நான் ‘சார்லி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். சார்லி என்பது மர்மமும் நுட்பமும் வலிமையும் ஒன்றாக கலந்த ஒரு பெண். அவளது வாழ்க்கைப் பயணத்தை ஆராய்வது சவாலானதோடு, நிறைவை அளித்த அனுபவமாக இருந்தது.

அனுராக் காஷ்யப்புடன் இணைந்து பணியாற்றியது, உரையாடல்களை விட படப்பிடிப்பு செயல்பாடுகளை உணரச் செய்தது. இதுவரை நான் எதிர்கொண்டிராத வகையில் இந்த படம் எனக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தியது. மும்பையின் இருண்டதாய் இருந்தாலும் அழகான ஒரு உலகத்தை ரசிகர்கள் அனுபவிப்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading