Wednesday, April 24, 2024

வேட்டையனை முடிச்சிடலாமா? அப்செட் ஆன ரஜினி… என்ன செய்ய போகிறார் ஞானவேல்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் மிகப்பெரிய கவனத்தை பெற்றார்.அவருக்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ இயக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.ஏப்ரல் மாதமே அந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என எதிர்பார்த்த நிலையில் இன்னமும் படப்பிடிப்பு முடியாததை பார்த்த ரஜினிகாந்த் தற்போது லேசாக அப்செட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் மாபெரும் வெற்றி பெற்றது இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என ஏகப்பட்ட மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்தனர்.அனைத்து மொழிகளிலும் பட்டைய கிளப்பிய ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடியை குவித்து தள்ளியது.

ஜெயிலர் படத்தை போலவே வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி என பல மல்டி ஸ்டார்கள் நடித்துள்ளனர். அடுத்ததாக உருவாக உள்ள கூலி படத்திலும் பாலிவுட், கோலிவுட் என பல ஸ்டார்கள் உள்ளே கொண்டு வரப்போகிறார் லோகேஷ் கனகராஜ்.

வரும் மே 12ம் தேதியுடன் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட ரஜினிகாந்த் உத்தரவு போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மே மாதத்திற்கு முன்னதாகவே வேட்டையன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கூறுகின்றனர்.

- Advertisement -

Read more

Local News