கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியான விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளங்களில் இந்த ரீ-ரிலீஸ் டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது. வசூலிலும் சிறப்பாக அமைந்தது. கடந்த இரண்டு மாதங்களாக உச்ச நட்சத்திரங்களின் பெரிய படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை.
இந்நிலையில், வெளியான மலையாள படங்களான ‘ப்ரம்மயுகம்’, ‘மஞ்சு மல்லி பாய்ஸ்’, ‘பிரேமலு’ ஆகியவை கோலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது இந்த ரீ-ரிலீஸ் கொண்டாட்டங்கள் கோலிவுட் திரையரங்குகளில் கலகலப்பை ஏற்படுத்தி வருகின்றன.
நேற்று மே 1ம் தேதி உழைப்பாளர் தினம். மேலும், நடிகர் அஜித்தின் பிறந்த நாள் கூட இந்த பிறந்தநாளையொட்டி , அவரது ‘தீனா’ திரைப்படம் தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது.அஜித் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ‘தீனா’ இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில், “எல்லோருக்கும் மே தின வாழ்த்துகள். எனக்கு மிக நெருக்கமான ‘தீனா’ திரைப்படம் இன்று மறுவெளியீடாவது மகிழ்ச்சியளிக்கிறது. ‘தல’ பாத்திரத்தில் நடித்த அஜித்திற்கு நன்றி. வாழ்த்துகள்” மீண்டும் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம்” என்று என்று பதிவிட்டுள்ளார்.