திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் (69) சென்னை அடையாறில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலமானார்.
இவரது மறைவு இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 1980ஆம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இளையராஜா இசையமைத்த அந்தப் பாடலை தீபன் சக்ரவர்த்தியுடன் இணைந்து பாடியிருந்தார்.
கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தொடு, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.