Saturday, September 14, 2024

காதலிலும் ஏமாந்தேன்…பணத்திலும் ஏமாந்தேன்… ஓவியா Open Talk!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட ஓவியா, தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுக்க பிரபலமானார். அவருக்கென்று சமூக வலைதளங்களில் ஆர்மியும் உருவாக்கப்பட்டது. ஆனாலும் பிக்பாஸுக்கு பிறகும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் ஓவியா சமீபத்தில் அளித்த பேட்டியில் எமோஷனலாக பேசினார்.

களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஓவியா, அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏராளமான பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிடைத்த படங்களும் சரியாக ஹிட்டாகவில்லை. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படம் மட்டும் நன்றாக ஓடியது. பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக ஜொலிக்கவில்லை‌.கடைசியாக பூமர் அங்கிள் படத்தில் யோகி பாபுவுடன் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஓவியா அளித்த சமீபத்திய பேட்டியில், காதலித்து பலர் என்னை ஏமாற்றினர். ஆனால் அதெல்லாம் எங்களுக்கு செட் ஆகவில்லை. இதுமட்டுமின்றி சிலர் பண விஷயத்திலும் என்னை ஏமாற்றினர்” என்றார். முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சக போட்டியாளரான ஆரவ்வை ஓவியா காதலிப்பது போன்று அவரது செயல்பாடுகள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News