Thursday, October 24, 2024

சூர்யாவின் உயரம் முக்கியமில்லை… அவர் மனம் எவ்வளவு உயர்ந்தது என்பதுதான் முக்கியம்- பாபி தியோல் நச் டாக்! #KANGUVA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யாவின் உயரம் பற்றி சமூக வலைத்தளங்களில் ஏராளமான ட்ரோல்கள் பரவி வரும் நிலையில், பாலிவுட் ரசிகர்களிடையே “கங்குவா” படத்தைக் கொண்டு செல்லும் போது, நடிகர் சூர்யா பாபி தியோலுடன் நடித்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். அவர் பாபி தியோலுடன் நடித்த போது முழு நம்பிக்கையையும் வைத்து நடித்ததாக கூறினார்.

“அனிமல்” படத்தில் ரன்வீர் கபூரின் எதிர்க்கதாபாத்திரமாக நடித்த பாபி தியோல், க்ளைமாக்ஸ் காட்சியில் தனது Shirtless வருகை மூலம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதே நேரத்தில் சூர்யா, பாபி தியோலின் பாடி பில்டிங் குறித்தும், 49 வயதிலும் அவர் சிக்ஸ்பேக் வைத்து சண்டைக் காட்சியில் இணைந்தது குறித்தும் பேசினார்.

அதிகரமாக பாபி தியோல், சூர்யாவின் உயரத்தை பற்றி பேச, “சூர்யாவின் உயரம் இங்கே முக்கியமில்லை, அவர் எவ்வளவு உயர்ந்த மனம் கொண்டவர் என்பதுதான் முக்கியம்” என்று சூர்யாவை புகழ்ந்தார். இதைக் கேட்டு சூர்யா நெகிழ்ந்து, பாபி தியோலின் கைகளை பிடித்து “போதும்” என கூறினார்.

- Advertisement -

Read more

Local News