இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் நடிகை கயாடு லோகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் கதாநாயகனாக விஷால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவிருப்பதாகவும், அவர்களில் ஒருவராக கயாடுத லோகர் தேர்வாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
தற்போது கயாடு லோகர், அதர்வா நடிக்கும் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

