Touring Talkies
100% Cinema

Wednesday, June 18, 2025

Touring Talkies

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’படத்திற்காக அமைக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய அரண்மனை செட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் பேய் தழுவிய திரைப்படம் ‘தி ராஜா சாப்’ டிசம்பர் 5ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவாக பேய் படங்களுக்கு பிரம்மாண்டமான செட்கள் அமைத்து காட்சிகள் உருவாக்கப்படுவது வழக்கமாயுள்ள நிலையில், இந்த படத்திலும் அதேபோல் மிகப் பெரிய பேய் பங்களா செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில், ராஜாவாக இருந்த ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்-ன் பேய் வசிக்கின்ற அந்த பங்களாவில் ஹீரோ பிரபாஸ் என்ன செய்கிறார்? அந்த பேய் எப்படி எதிர்வினை செய்கிறது? என்பதையே கதை மையமாகக் கொண்டு திரைப்படம் நகர்கிறது.

இந்தக் காட்சிக்காக ஐதராபாத்தில் 42 ஆயிரம் சதுர அடியில் ஒரு அரண்மனை மாதிரியான பங்களா செட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பிரபாஸ், ஹீரோயின்கள் மற்றும் பேயுடன் தொடர்புடைய முக்கியமான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளன. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் என குறிப்பிடப்படுகிறது. இந்த செட்டை உருவாக்கியவர், ‘காக்க காக்க’, ‘சிறுத்தை’, ‘பையா’ போன்ற பல தமிழ்ப் படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணியாற்றிய ராஜீவன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து நான்கு மாதங்களில் இந்த செட்டை அமைத்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை, ஏற்கனவே ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தை தயாரித்த பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒளிப்பதிவாளராக, ‘வாரிசு’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய கார்த்திக்பழனி உள்ளார். நாயகிகளாக நிதி அகர்வால், மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையை வழங்கியுள்ளார். பிரபாஸ் நடிக்கும் முதல் திகில் படமாக இது இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News