Wednesday, October 2, 2024

உருவாகிறது ஆர். எம். வீரப்பன் அவர்களின் ஆவணப்படம்… சத்யா மூவிஸ் அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணாவின் மிக நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர் ஆர்.எம். வீரப்பன். அவர் திரைப்பட தயாரிப்பாளராக மட்டுமல்லாது, திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தபோது அதிமுகவில் இணைந்து, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 முறை அமைச்சராக பதவி வகித்தவர். மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். 1977 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் 5 முறை தமிழக அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

திரைத்துறையில், அவர் 20க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். அதில், எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய், காவல்காரன், நான் ஆணையிட்டால், ரிக்ஷாகாரன், இதயக்கனி ஆகிய பல வெற்றிப்படங்கள் இருந்தன. மேலும், ரஜினிகாந்த் நடித்த மூன்றுமுகம், பட்ஷா போன்ற பிளாக்பஸ்டர் படங்களையும் தயாரித்துள்ளார். தமிழ் திரையுலகில் முக்கிய ஆளுமையான ஆர். எம். வீரப்பன் அவர்களின் நினைவாக, இன்றைய இளைய தலைமுறையும், வருங்கால சந்ததியரும் அவரைப் பற்றி முழுமையாக அறியக் கூடிய வகையில், உலகத் தரத்தில் ஒரு ஆவணப்படம் உருவாக உள்ளது.

இந்த ஆவணப்படத்தை சத்யா மூவிஸ் தங்கராஜ் தயாரிக்க, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பதம் வேணு குமார் மேற்பார்வையில் உருவாகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த ஆவணப்படத்தில் பங்கேற்று, ஆர். எம். வீரப்பன் குறித்து தங்களின் நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர உள்ளனர். இதற்கான தொடக்கமாக, தயாரிப்பாளர் தங்கராஜ் மற்றும் மேற்பார்வையாளர் பதம் வேணு குமார் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து உரையாடினர். இளையராஜா இதற்காக வாழ்த்து தெரிவித்ததோடு, ஆவணப்படத்தில் தானும் பங்கேற்பேன் என்று உறுதியளித்துள்ளார். இந்த ஆவணப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News