நடிகை சமந்தா கடைசியாக தயாரிப்பாளராகவும் சிறப்பு தோற்றத்திலும் நடித்தது ‘சுபம்’ என்ற தெலுங்கு திரைப்படம். அதன் பின்னர், தன் தயாரிப்பு நிறுவனம் த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் ‘மா இண்டி பங்காரம்’ எனும் புதிய திரைப்படத்தைத் தயாரித்து, அதில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக ஓராண்டுக்கு முன்பே அறிவித்திருந்தார்.

ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தின் திரைக்கதை பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தா, தனது அடுத்த படத்தைப் பற்றிய முக்கிய தகவலை வெளியிட்டார்.
அதில் அவர், “என்னுடைய அடுத்த தெலுங்கு படம் ‘மா இண்டி பங்காரம்’. இந்த படத்தை என் சொந்த நிறுவனம் த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நந்தினி ரெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த மாதத்திலேயே படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது,” எனக் கூறியுள்ளார்.