குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகரான லண்டனை நோக்கி 230 பயணிகளுடன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’வின் போயிங் 787-8 டிரீம் லைனர் விமானம், கடந்த 12ம் தேதி திடீரென தரையில் விழுந்து வெடித்தது. இந்த கொடூர விபத்தில் ஒருவர் தவிர, மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.

இந்த கொடூர விபத்து குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ஆழ்ந்த வேதனையை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும் ஒன்று. இது குறித்து மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. ஆண்டவனின் அருளால் இனிமேல் இப்படியொரு சம்பவமும் நடக்கக் கூடாது என பிரார்த்திக்கிறேன்,” எனக் கூறினார்.