இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘எல்சியு’ என்ற சினிமாட்டிக் யூனிவர்ஸ் ஒன்றை தனது படங்களை கொண்டு உருவாக்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இதுகுறித்த மணிரத்னம் தனது கருத்தை சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் மூன்று வேறுபட்ட கதாபாத்திரங்களை கொண்டு, அந்த மூன்று கதைகளும் ஒரே இடத்தில் சந்திக்கும் விதமாக காட்சிப்படுத்தியிருந்தார். அந்த மூன்று கதைகளையும் தனித்தனியாக இயக்கி, ஒரு சினிமா யூனிவர்ஸாக உருவாக்கலாம் எனும் கருத்து இணையத்தில் பலரும் முன்வைத்து வந்தனர்.
இதுகுறித்து இயக்குனர் மணிரத்னம் அளித்த பதிலில், ஆயுத எழுத்து படத்தில் இடம்பெறும் கதைகளை தனித்தனியாக மூன்று படங்களாக உருவாக்க முடியும். அந்த அளவுக்கு அந்த கதைகளில் தனித்தன்மை இருக்கிறது. ஆனால், அவற்றை தனித்தனியாக எடுத்துத் தொடர்ந்து ஒரு யூனிவர்ஸாக மாற்றவேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஏற்கனவே ஒரு படத்தை இயக்கவே மிகவும் கடினமாக இருக்கிறது. அப்படியிருக்க, யூனிவர்ஸ் போன்ற ஒரு பெரிய கட்டமைப்பில் பல படங்களை எடுப்பது எப்படி சாத்தியமாகும்? அதற்கான தகுதி எனக்கில்லை. லோகேஷ் கனகராஜ் மாதிரியானவர் அதற்கு சரியானவர் என தெரிவித்துள்ளார்.