Tuesday, October 22, 2024

நான் இன்று பலம் வாய்ந்தவளாக இருக்க காரணம் இதுதான்… நடிகை சமந்தா டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடரில் நடித்துள்ள சமந்தா, அதன் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமந்தா தனது வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளார். கணவர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து செய்த பின்னர் மன அழுத்தத்திற்கு ஆளானார். மேலும், தசை அழற்சி நோய் தாக்கத்தால், சில காலம் திரையுலகில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டார். தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.

.சமீபத்திய பேட்டியில், அவர்,”கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது தான் மனிதர்கள் பலம் வாய்ந்தவர்களாக மாறுகிறார்கள். அடியடியாக விழுந்து விட்டால் தான் நமது உண்மையான பலம் என்ன என்பதை உணர முடிகிறது. ஒரு முறை அடிமட்டத்திற்கு சென்றால், அதற்குப் பிறகு எந்த பிரச்சினையும் பெரிய பிரச்சினையாக தெரியாது. அது நம் வாழ்வில் வரப்பிரசாதமாகவே இருக்கும். நான் இன்று பலம் வாய்ந்தவளாக இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் என்னுடைய கடுமையான வாழ்க்கை அனுபவங்களே. யாராவது கஷ்டப்பட்டால், அது அவர்களின் நல்லதற்காகவே என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

- Advertisement -

Read more

Local News