Tuesday, October 22, 2024

உடல் எடை அதிகரித்ததால் மன அழுத்தத்தில் இருந்தேன்… வாரணம் ஆயிரம் பட நடிகை ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சமீரா ரெட்டி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். 2014-ல் தொழிலதிபர் அக்‌ஷய் வார்தேவை திருமணம் செய்து கொண்ட பிறகு, அவர் தனது வாழ்க்கையில் கடுமையான சவால்களை சந்தித்துள்ளார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீரா ரெட்டி, சமீபத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தனது பிரசவ கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “நான் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருந்த போது, எனது உடல் எடை 105 கிலோவாக அதிகரித்தது. பிரசவத்திற்கு பிறகு ஒரு வருடத்திற்கு வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை. இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது.

எனது டாக்டர்தான் மன அழுத்தத்தை சமாளிக்க உதவினார். அந்த சமயத்தில் எனது கணவர் தான் மகனுக்குச் சாப்பாடு கொடுப்பது, உடைகள் மாற்றுவது போன்றவற்றில் ஈடுபட்டார். இதுபோன்ற விஷயங்களில் பெண்களுக்கு விழிப்புணர்வு மிக முக்கியம். நான் நடிப்பை கைவிட்டபோது யாரும் என்னிடம் ஏன் கைவிட்டாய் என்று கேட்கவில்லை. ஆனால், நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.

- Advertisement -

Read more

Local News