Tuesday, October 8, 2024

நான் மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க விரும்புவதில்லை – நடிகர் அரவிந்த் சாமி ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரித்திருக்கும் ‘மெய்யழகன்’ திரைப்படம் கடந்த 27ம் தேதி வெளியானது. இதில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார், அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், மற்றும் ’96’ புகழ் பிரேம்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார், தேவதர்ஷினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட அரவிந்த்சாமி பேசுகையில், “நான் பணியாற்றிய படங்களிலேயே மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. அதற்கு படக்குழுவினருக்கு நன்றி. இந்த படம் வெளியானபோது நான் இங்கே இல்லை, வெளிநாட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. வெளிநாட்டிலிருந்தபோதும், நான் கார்த்தி, இயக்குனர் பிரேம்குமார், ராஜசேகர் ஆகியோருடன் படத்தைப் பற்றி தொலைபேசியில் பேசிக்கொள்வேன்.

படத்தில் எனது நடிப்பை பாராட்டியதை விட, கார்த்தியின் நடிப்பை பாராட்டியதே எனக்கு பெருமையாக இருந்தது. இயக்குனர் விரும்பியதை எந்த மாற்றமும் இல்லாமல் அந்தக் கதாபாத்திரங்களை வெளிப்படுத்த நானும், கார்த்தியும் மற்றும் மற்றவர்களும் முயற்சித்தோம். படம் எடுக்கச் செல்லும் போது, மனதில் எப்போதும் அந்தக் கதாபாத்திரம் இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டு செல்வேன். ஆனால், அங்கே மற்றவர்களின் நடிப்பை பார்த்து, சில விஷயங்களை கற்றுக் கொண்டு நடிப்பேன்.

நான் மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க விரும்புவதில்லை. நான் அதிக படங்களில் நடிக்கவும் செய்யவில்லை. எனக்கு எந்த போட்டியிலும் இருக்க வேண்டும் என்று எண்ணமும் இல்லை. நான் செய்யும் வேலையை ரசித்து செய்ய வேண்டும், மேலும் இது போன்ற அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்” என தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News