“ஜெய் பீம்” இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வேட்டையன்” திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். “வேட்டையன்” அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.
கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. “மனசிலாயோ” எனும் முதல் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார்.
மஞ்சுமா வாரியர், இப்படத்தில் தாரா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்திய நேர்காணலில் அவர் தனது கதாபாத்திரத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். “நான் இந்தப் படத்தில் தாராவாக நடித்துள்ளேன். ரஜினிகாந்திற்கு மனைவியாக நடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மனசிலாயோ பாடலின் போது அனைத்து நடனக் கலைஞர்களுடன் ஒரே நேரத்தில் நடனமாடியது புதிய அனுபவமாக இருந்தது என்று அவர் பகிர்ந்துள்ளார்.