Thursday, September 26, 2024

96 இரண்டாம் பாகம் முதல் பாகத்தை போல் இருக்காது… இயக்குனர் பிரேம் குமார் சொன்ன அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்த “96” படத்தை பிரேம்குமார் இயக்கி வெளியிட்டார். காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது. இதுதவிர, விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாகவும் அமைந்தது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரேம்குமார் தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிப்பில் “மெய்யழகன்” என்ற புதிய படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வருகிறது.

ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில், ‛‛96″ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, இயக்குனர் பிரேம்குமார் கூறுகையில், ‛‛96 படத்தின் முதல் பாகம் முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவானது. ஆனால், இரண்டாம் பாகம் காதல் சார்ந்ததாக இல்லை, குடும்ப பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உணர்ச்சி பூர்வமான ஒரு கதையாக உருவாக இருக்கிறது” என்றார்.

- Advertisement -

Read more

Local News