பழனி முருகன் கோவிலில் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்தார். முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டார். கோவிலில் இருந்து வெளியே வரும் போது சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக 18-ஆம் படி கருப்பணசுவாமிக்கு 5 அடி நீளமுள்ள அரிவாளை நேர்த்திக்கடனாக செலுத்தி சிறப்பு வழிபாடு செய்தார்.
Add a Comment
