நடிகை நயன்தாரா சினிமாவில் பிசியான பணிகளுக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரட்டை ஆண் குழந்தைகளுடன் வெளிநாடு சுற்றுலா மற்றும் பல்வேறு கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலாவும் சென்று வருகின்றனர்.அந்த வகையில் நயன்தாரா தனது கணவருடன் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சக்குளத்து காவு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். நயன்தாரா கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். கோவிலில் தரிசனம் செய்த படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Add a Comment
