‘டிமான்ட்டி காலனி-3 ’ திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது?

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த திரைப்படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படம் வெளியாகியதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஹாரர் திரில்லர் வகை திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களை இந்த படம் பெரிதும் கவர்ந்தது. மேலும், படத்தின் திரைக்கதை, பின்னணி இசை மற்றும் பரபரப்பான காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

அதனைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தில் அருள்நிதியுடன் ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தற்போது திரைப்படத்தின் வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் கோடை காலத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த திரைப்படம் ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால், வரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் முக்கிய தகவல்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading