தலைவர் 173 படத்திலிருந்து விலக காரணம் இதுதான்… மனம் திறந்த‌ இயக்குனர் சுந்தர் சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பிலும், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பிலும் உருவாகவிருந்த திரைப்படத்திலிருந்து தாம் விலகியதற்கான காரணத்தை குறித்து இயக்குநர் சுந்தர் சி வெளிப்படையாக தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். இந்த வாய்ப்பைப் பற்றிய எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், அதே சமயம் தனது தனிப்பட்ட படைப்புச் சுதந்திரம் குறித்து ஏற்பட்ட எண்ணங்களே இந்த முடிவிற்கு காரணமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ரஜினி சார் படத்தில் பணியாற்றுவதில் எனக்கு ஒரு விதமான அழுத்தம் இருந்தது. இதுவரை நான் இயக்கிய அனைத்து படங்களையும் என் விருப்பத்திற்கேற்ப உருவாக்கியுள்ளேன். மக்களுக்கு பிடிக்கும் என நான் உணர்ந்ததை நேரடியாகச் செய்துவிடுவேன். ஆனால், இவ்வளவு பெரிய அளவில் உருவாகும் ஒரு படத்தில் அதேபோல் செயல்பட முடியாது என்று எனக்குள் தோன்றியது. அதனால் தான் அந்த திட்டத்திலிருந்து விலக முடிவு செய்தேன்.

மேலும், இந்த முடிவிற்கு ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் எந்த விதத்திலும் காரணமல்ல. நான் விலகப்போகிறேன் என்று அவர்களிடம் நேரடியாகத் தெரிவித்த பிறகே இந்த முடிவை அறிவித்தேன். இதற்குப் பிறகு வேறு எந்த காரணமும் இல்லை” என்று அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading