தேஜு அஸ்வினி, என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் ஒரு திறமையான நடன கலைஞரும் ஆவார். பின்னர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஜோடியாக நடித்த பிளாக்மெயில் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது. சமூக வலைதளங்களில் மிகவும் செயலில் இருந்து வரும் தேஜு அஸ்வினி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது வாழ்க்கையில் நிறைவேறாமல் போன ஒரு கனவைப் பற்றி தேஜு அஸ்வினி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில், அதே சமயம் ஒரு நடனப்பள்ளியையும் தொடங்கி நடத்தி வந்தேன். அந்த பள்ளியை மேலும் வளர்த்து பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அதே நேரத்தில் கொரோனா கால ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக அந்த நடனப் பள்ளியை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அந்த நடனப் பள்ளி எனது மிகப்பெரிய கனவு. அது முற்றிலும் கலைந்து போனது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. அதற்குப் பிறகு வாழ்க்கை என்னை வேறு பாதைக்கு கொண்டு சென்றது. அப்படி வந்த மாற்றங்களின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து, இன்று நடிகையாகி நிற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
—
