‘LIK’ படத்தில் நல்ல அம்சங்கள் நிறைய உள்ளன… விக்னேஷ் சிவன் வைத்த முக்கியமான வேண்டுகோள்!

‘எல்ஐகே’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த இந்த படத்திற்காக சென்னை நகரில் நடைபெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி இதுவரை சுமார் 50 கோடி ரூபாய் வரையிலான வசூலை ஈட்டியுள்ளதால், மேலும் அடுத்த வாரங்களிலும் வசூலை அதிகரிக்க இந்த நன்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் கவுரி கிஷன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் நயன்தாரா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. இந்நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் தனது தனித்துவமான நகைச்சுவை கலந்த பாணியில் உரையாற்றினார்.

அவர் உரையாற்றும்போது, “இந்த படத்தைப் பற்றி சில சமூக ஊடக இன்ப்ளூயன்சர்கள் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அளவிற்கு எங்களிடம் வசதி இல்லை. எனவே, எப்படியாவது இந்த படத்தை ஓட வைக்க உதவுங்கள். தற்போது ‘லைன் கலாச்சாரம்’ அதிகரித்து வருகிறது. மேடையில் நான் அழுதேன், மேடையை உடைத்தேன் என்று ஏதாவது sensational செய்திகளை வெளியிட்டாலும் பரவாயில்லை, படம் ஓட வேண்டும். சிலர் வீடியோவை தொடக்கத்தில் படத்தை விமர்சித்து ஆரம்பித்து, பின்னர் நல்ல விஷயங்களைப் பேசுகின்றனர். அதை எப்படி சமாளிப்பது என எனக்கு புரியவில்லை. இன்னும் பல விஷயங்களை நான் செட்டில் செய்ய வேண்டியுள்ளது. இந்த வாரம் படம் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும்; பலரும் அந்த வருமானத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். என்னை உங்களுடைய குடும்ப உறுப்பினராக நினைத்து இந்த படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.

என்னால் பெரிய அளவில் படங்களை உருவாக்க தெரியாது. சிலர் நான் செய்த உணவிலும் குறை காண்பது போல படத்திலும் குறை காண்கிறார்கள். படத்தில் நல்ல அம்சங்கள் நிறைய உள்ளன. உங்களுக்கு கோபம் இருந்தால் அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது நேரில் வந்து தெரிவியுங்கள். சமூக ஊடகங்களில் எதிர்மறை வீடியோக்களை வெளியிட வேண்டாம். மீண்டும் வலியுறுத்துகிறேன், எனக்கு இன்னும் பல பொறுப்புகள் உள்ளன. படம் வெற்றி பெற வேண்டும். எங்கள் ஹீரோ பிரதீப்பின் இந்த படமும் 100 கோடி வசூல் சாதனை படைத்தது என்று சொல்லும் நாள் வர வேண்டும். அதற்காக நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியார். மேலும் தனது நண்பர் எச்.வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ படம் லீக் ஆனது மிகுந்த வேதனை அளித்தது, அது மரண வேதனை போன்றது என்றும் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading