சின்னத்திரையில் இருந்து விலகி வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கும் நடிகை சுபிக்ஷா!

சின்னத்திரை நடிகையான சுபிக்ஷா தற்போது ‘வீரா’ என்ற தொடரில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவர் ‘பேமிலி படம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் ஒரு அளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அதில் சுபிக்ஷாவின் நடிப்பும் ரசிகர்களிடையே பேசுபொருளாக அமைந்தது. எனினும், அதன் பின்னர் அதிகமான புதிய வாய்ப்புகள் அமையாத காரணத்தால், தற்போது மீண்டும் ‘வீரா’ தொடரில் தனது நடிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், விரைவில் ‘வீரா’ தொடரில் சுபிக்ஷா நடித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரம் நிறைவுக்கு வரும் என்றும், அவர் தானாகவே அந்த தொடரிலிருந்து விலக முடிவு செய்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வீரா’ தொடரில் தனது கதாபாத்திரம் முன்கூட்டியே திட்டமிட்டபடி முடிவுக்கு வருவதாகவும், விரும்பினால் அதை நீட்டிக்கலாம் என்று தயாரிப்பு தரப்பும் சேனல் தரப்பும் தெரிவித்த போதிலும், தாம் அதனை மறுத்ததாகவும் கூறினார். இரு தரப்பினருடனும் நல்ல புரிதலுடன் பேசி மகிழ்ச்சியுடன் விலகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது தமக்கு திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருவதால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார். அதோடு, யோகி பாபு உடன் ஜோடியாக நடித்துள்ள ஒரு புதிய திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளதாகவும், அந்த படம் தனது திரை வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading