மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இரண்டாம் பாகமான துரந்தர் தி ரிவென்ச் இன்று வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் காட்சிகளும், பணமதிப்பிழப்பு அறிவிக்கும் காட்சிகளும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்தில் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செல்லும் ரன்வீர் சிங், அங்கிருந்து இந்தியாவுக்கு பயங்கரவாதிகள் ஊடுருவுவது, ஆயுதங்கள் கடத்துவது, கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது போன்ற தகவல்களை சேகரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பாகத்தில் இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும் பயங்கரவாதிகளை ரன்வீர் சிங் பழிவாங்கும் வகையில் கதை அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
