ஷாகித் கபூர் -ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘காக்டெய்ல் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

நடிகை ராஷ்மிகா மந்தனா கதையின் மையக் கதாபாத்திரமாக நடித்த ‘தி கேர்ள் பிரண்ட்’ திரைப்படம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியீட்டுக்கு முன்பே இந்த திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல், வெளியான பிறகு இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்குப் பிறகு ராஷ்மிகா மந்தனா தற்போது பல மொழிகளில் உருவாகும் புதிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். குறிப்பாக ஹிந்தி மொழியில் உருவாகும் ‘காக்டெய்ல் 2’ திரைப்படத்திலும், தெலுங்கு மொழியில் தயாராகி வரும் ‘மைசா’, ‘ரணபாலி’ போன்ற படங்களிலும் அவர் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களில், ஹிந்தி மொழியில் நடிகர் ஷாகித் கபூர் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘காக்டெய்ல் 2’ திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் வரும் மார்ச் 18ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தை வருகிற ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading