நான் வாங்கி கொடுத்த காதுகேள் கருவியை ஊழியர் ஒருவர் கழட்டி எறிந்துவிட்டார்… நடிகர் மம்முட்டி பகிர்ந்த தகவல்!

நடிகர் மம்முட்டி திரைப்படங்களில் நடிப்பதற்கும் அப்பால், தாம் முன்னெடுத்து நடத்தி வரும் அறக்கட்டளையின் மூலம் பொருளாதார ரீதியாக பின்னடைவு நிலையில் உள்ள பலருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் கேரளாவில் செயல்படும் ஒரு அறக்கட்டளையின் சார்பில் காது கேளாத நபர்களுக்கான கேள்வித் துணைக் கருவி அறிமுகப்படுத்தும் விழாவில் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்வின்போது, சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த மனதை நெகிழச் செய்த சம்பவத்தை மம்முட்டி நினைவுகூர்ந்து பகிர்ந்துகொண்டார்.

கடந்த 2009ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘லவ்டு ஸ்பீக்கர்’ திரைப்படத்தில் மம்முட்டி காது கேளாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அவர் காதுகேள் கருவி அணிந்தபடியே பிறர் பேசுவதைக் கேட்டு புரிந்து கொள்வது போன்ற வடிவில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த காலகட்டத்தில், உண்மையிலேயே காது கேளாத மாற்றுத்திறனாளி தொழிலாளி ஒருவர் அங்கே பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அவருக்காக மம்முட்டி தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வித் துணைக் கருவியை வாங்கி வந்து வழங்கியிருந்தார்.

அந்த கருவியை காதில் அணிந்தவுடன், வாழ்நாளில் முதல் முறையாக வெளிச்சப்தத்தை தெளிவாக உணர்ந்த அந்த தொழிலாளி திடீரென அதிர்ச்சியடைந்து, உடனே அந்த கருவியை கழற்றி எறிந்துவிட்டதாக மம்முட்டி தெரிவித்தார். இந்த அனுபவத்தை பகிர்ந்த மம்முட்டி, “நீண்ட நாட்களாக எந்த ஒலியையும் கேட்காத அந்த நபருக்கு, முதன்முறையாக சப்தம் செவியில்பட்டபோது அதன் தாக்கத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவர் அந்த கருவியை கழற்றி எறிந்தார்” என்று உணர்ச்சிபூர்வமாக விளக்கினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading