த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’!

மலை மற்றும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய கிரைம் திரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இந்த திரைப்படத்தை கோதை எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். சுவிஸ் பிலிம் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இயக்குனர் பாலாஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான சித்து சித் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற தர்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, சாப்ளின் பாலு உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் பாலாஜி கூறுகையில், “சமூகத்தில் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு வரும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த கிரைம் திரில்லர் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மலைக் கிராமம் ஒன்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் மர்மமான கொலைச் சம்பவங்களும், அந்த கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை கண்டறிய காவல்துறையினர் மேற்கொள்ளும் விசாரணைகளும் படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளன. இறுதியில் அந்த மர்மச் சம்பவங்களின் பின்னணியில் என்ன நடந்தது என்பது படத்தின் முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான திருப்பமாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வண்டிப்பெரியார், அச்சன்கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் உள்ளிட்ட இயற்கை எழில் நிறைந்த, சவால்கள் நிறைந்த மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இயற்கை சூழலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading