Friday, May 10, 2024

வெற்றிமாறன் மாத்தி மாத்தி சொல்வார்… வாடிவாசல் குறித்து ஷாக் நியூஸ் சொன்ன அமீர்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக விளங்கும் வெற்றிமாறன், நாவல்கள் மற்றும் சிறுகதைகளை படமாக்குவதில் ஆழமாக ஈடுபட்டுள்ளார். இதுவரை அவர் இயக்கிய ‘விசாரணை’, ‘அசுரன்’ போன்ற படங்கள் இந்திய அளவில் கவனம் பெற்றன.

அவரின் அடுத்த படமான ‘வாடிவாசல்’, சி.சு.செல்லப்பா எழுதிய சிறுகுறுநாவலை மையமாக கொண்டுள்ளது. இந்த படம் சூர்யா நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார், இது தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆனால், ‘வாடிவாசல்’ படத்தின் ஷூட்டிங் இன்னும் ஆரம்பமாகாத நிலையில், வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் இரண்டாம் பாக படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவரும் தங்கள் தனிப்பட்ட பணிகளில் பிஸியாகி, ‘வாடிவாசல்’ படத்தின் பணிகள் மேலும் காலதாமதமாகின. நடிகர் அமீர் சமீபத்திய பேட்டியில் பேசியபோது,வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்பார் பின்னர் மீண்டும் இப்போதைக்கு இல்லை லேட்டாகும் என்பார் இப்படி வெற்றிமாறன் ஷூட்டிங் தொடங்கும் தேதிகளை தொடர்ந்து மாற்றுவதாக தெரிவித்தார்.

இதற்கு நான் பெரிதாக ரியாக்ட் செய்யமாட்டேன். அவர் என்ன சொன்னாலும் அப்படியா என்று கேட்டுக்கொள்வேன். திடீரென்று ஒருநாள் இப்போதைக்கு வாடிவாசல் படம் பண்ணவில்லை என்று சொல்வார். நானும், வெற்றிமாறனும் நான்கு நாட்களுக்கு முன்னர்கூட சந்தித்துக்கொண்டோம். அப்போது அவர் வாடிவாசல் படத்தை நாம் மீண்டும் ஆரம்பிக்கிறோம் என்று சொன்னார். அதற்கும் நான் ஓ அப்படியா சந்தோஷம் என்று சொன்னேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News