Saturday, September 14, 2024

மற்றொரு பிரம்மாண்டத்திற்கு தயரான ராஜமௌலி… ஹீரோவும் வில்லனும் யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜமவுலி, மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கான முன்னோக்கி வேலைகள் கடந்த பல மாதங்களாகவே நடைபெற்று வருகின்றன. படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் கதை பற்றிய தகவல் கசிந்துள்ளது. ராமாயணக் கதையை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதாம். ‘சீதையைத் தேடி இலங்கை சென்ற அனுமான்’ என்பதே இப்படத்தின் மையக் கரு என கூறப்படுகிறது.

அமெரிக்க காடுகளில் உருவாக உள்ள இப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ‘சலார்’ படத்தில் ஏற்கெனவே வில்லனாக நடித்திருந்தார் பிருத்விராஜ். விரைவில் இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகும் என்று தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News