‘பதான்’, ‘ஜவான்’ ஆகிய ப்ளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு, நடிகர் ஷாரூக் கான் தற்போது ‘கிங்’ என்ற பிரமாண்டமான ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தீபிகா படுகோனே, சுஹானா கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பிரபல இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார்.

ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த ‘கிங்’ படத்தில் மொத்தம் ஆறு பெரும் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், ஒவ்வொரு சண்டை காட்சியும் சர்வதேச தரத்தில் உலகின் பல நாடுகளில் படமாக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய ஆக்ஷன் அவதாரத்தில் ஷாரூக் கான் தோன்றவிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ‘கிங்’ படத்தின் ஸ்டன்ட் சீன்களுக்கு ஹாலிவுட் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்கள் பணியாற்றி வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஷாரூக் கான் ரசிகர்கள் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த படத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

