நடிகர் ரஜினிகாந் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “கூலி”. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார். இதில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதி ஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. தற்போது இந்த படத்தின் டப்பிங் மற்றும் பின் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து அமீர் கான் பேசினார். அவர் கூறியதாவது, கூலி படத்தில் நான் நடித்திருக்கும் பாத்திரம் மிகவும் வித்தியாசமானது. இது அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். ரஜினி சார் எனக்கு மிகவும் பிடித்தவர். அவர்மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. லோகேஷ் என்னிடம் இது ரஜினி சாரின் படம் என்று கூறியதும், அவரிடம் கதையை கேட்காமலே நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று ஒப்புக்கொண்டுவிட்டேன என்றுள்ளார்.