சமீபத்தில் ஜொனிதா காந்தி, தன் சமூக வலைதளப் பதிவில் இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், “சமூக வலைதளங்களில் பெண்களுக்கு நிறைய பாலியல் தொல்லைகள் நடக்கின்றன. நான் இன்ஸ்டாகிராமில் கொஞ்சம் ஆக்டிவாக இருப்பேன். தினமும் எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்த வண்ணமிருக்கும், அதையெல்லாம் பெரிதாக நான் பார்க்க மாட்டேன்.ஆனால், இன்ஸ்டாகிராமில் எனக்கு நண்பர்களாக இருப்பவர்கள் சிலர் என்னை சில பதிவுகளில் மென்சன் செய்வார்கள். அதைப் பார்த்தால் அவ்வளவு ஆபாசமாக இருக்கும். இப்படி பல பாலியல் தொல்லைகள் சமூக வலைதளங்களில் நடக்கிறது” என்று பேசியிருக்கிறார்.
