மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் ‘படைத் தலைவன்’ திரைப்படம் நேற்று வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து, நகைச்சுவை படங்களில் நிபுணத்துவம் பெற்ற இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் ‘கொம்புசீவி’ படத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ளார். இதில் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர், படம் 1996-ஆம் ஆண்டு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதிகளில் நடந்த உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து, சண்முக பாண்டியன் படக்குழுவினருக்கு புதிய உடைகள் மற்றும் பிரியாணி வழங்கி நன்றியுடன் கவுரவித்துள்ளார்.