Tuesday, October 15, 2024

பிளடி பெக்கர்‌ படத்திற்காக உண்மையிலேயே பிச்சை எடுத்தேன்… நடிகர் கவின் பகிர்ந்த சுவாரஸ்யம்! #BLOODYBEGGAR

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக திகழும் டாடா, வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது, அவர் நெல்சன் திலீப்குமார் தயாரித்த “பிளடி பெக்கர்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கவினுடன் சேர்ந்து ரெடின் கிங்ஸ்லி, மாருதி, பிரகாஷ்ராஜ், சுனில், சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நெல்சன் திலீப்குமாரின் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கிய படம் “பிளடி பெக்கர்”. இதில், கவின் பிச்சைக்காரனின் கெட்டப்பில் நடித்துள்ளார். நெல்சனின் படங்களைப் போலவே, இப்படமும் டார்க் காமெடி கதையில் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டீசர் வெளியானதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. “பிளடி பெக்கர்” படம் வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்ட விதம் குறித்து, நடிகர் கவின் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அவர், “உண்மையிலேயே பிச்சைக்காரர்களுக்கு காசு தருகிறார்களா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. அதனால், கெட்டப்பில் தெருவில் நடந்தேன். ஒரு அம்மாவிடம் சென்று, ‘சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு, காசு இருந்தால் கொடுங்க’ என்று கேட்டேன். அந்த அம்மா எனக்கு இருபது ரூபாய் கொடுத்தார். அதன் பிறகு எனக்கு நம்பிக்கை வந்து, சரி ஷூட்டிங் போகலாம் என்று முடிவு செய்தேன் என சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் நடிகர் கவின்.

- Advertisement -

Read more

Local News