அடுத்த ஆண்டில் நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கான படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் சேரும் வகையில், நடிகர் கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் நிர்வாக அதேபோல் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தயாரிப்பாளர் கபாடியா, உடை வடிவமைப்பாளர் மேக்சிமா பாசு, ஆவணப்பட இயக்குனர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ் ஆகியோரும் இந்த குழுவில் இணைய உள்ளனர்.

98வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் அமைந்துள்ள டால்பி தியேட்டரில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கோனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்க உள்ளார். விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் ஜனவரி 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலுக்குப் பிறகு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் “உலகளவில் மிக உயர்ந்த திரைப்பட விருதான ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக் குழுவில் சேரும் அழைப்பை பெற்றுள்ள என் அன்பு நண்பரும், கலைஞானியுமான கமல்ஹாசனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டார். இதற்கு பதிலளித்து கமல்ஹாசனும், “ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது என்றால், தமிழ்நாட்டின் முதலமைச்சரின் வாழ்த்து மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.