சமீபத்திய பேட்டி ஒன்றில் அமீர்கான் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இரண்டு மனைவிகளுடனான விவாகரத்து குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இந்தியாவில் நாம் திருமணத்தை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கிறோம். ஒருவருக்கு திருமணம் முறிந்து விவாகரத்து ஏற்பட்டால் மக்கள் அதை விரும்புவதில்லை. அது எனக்கு முழுமையாகத் தெரியும். நாம் அதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அதை நான் உண்மையாக வைத்திருக்க விரும்புகிறேன்.ரீனா அல்லது கிரணுடன் திருமண பந்தத்தில் இருக்க முடியாதது எங்களுக்கும், எங்கள் மொத்த குடும்பத்திற்கும் ஒரு இழப்புதான். நாங்கள் இதை மகிழ்ச்சியுடன் செய்யவில்லை. சில சூழ்நிலைகள் எங்களை இந்த நடவடிக்கையை எடுக்கத் தூண்டியது. கிரணும் நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று உலகம் முழுவதும் பொய் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். ஆனால், அது ஒரு பொய்யாக மட்டுமே இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
