இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கடைசியாக 2015ல் ‘இசை’ என்ற படத்தை இயக்கியிருந்தார். அதற்கு பிறகு முழுவதும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
தற்போது பல வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குனராக களமிறங்கி உள்ளார். இவர் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு ‘கில்லர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இப்படத்தை கோகுலம் மூவிஸ் மற்றும் ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர் .
தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளர் ஆக ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நியூ, கொமரம் புலி, அன்பே ஆருயிரே படங்களுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.