தெலுங்குத் திரைப்பட நடிகரான நாகார்ஜுனா, தமிழ் திரையில் 1997ஆம் ஆண்டு பிரவீன் காந்தி இயக்கிய ரட்சகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பயணம், தோழா போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது ரஜினிகாந்துடன் கூலி, தனுஷுடன் குபேரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்

இந்த இரு படங்களில் தனது கதாபாத்திரங்களைப் பற்றிய கருத்தை நாகார்ஜுனா பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், கூலி, குபேரா ஆகிய இரு படங்களிலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்துள்ளேன் என்கிறார்.
எனக்கு முக்கியத்துவம் இல்லாத எந்த ஒரு படத்திலும் நடிக்க விரும்புவதில்லை. குறிப்பாக கூலி படத்தை எடுத்துக் கொண்டால், திரையரங்குகளில் ரசிகர்கள் விசில் அடிக்கத் துவங்குவார்கள். அந்த அளவுக்கு கதையின் தாக்கம் பெரிதாக உள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். குபேரா படம் தனுஷுக்குக் கருத்துமிக்க படம் ஆகும். அந்த படத்தில் நான் வழக்கத்தை விட முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அந்த கதாபாத்திரத்தில் எந்த ஒரு ஹீரோயிசத்தையும் காண முடியாது என்கிறார் நாகார்ஜுனா.