திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை திருக்குறள் என்ற பெயரில் படமாக எடுக்கிறார் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். இவர் ஏற்கனவே காமராஜர் வாழ்க்கையை சினிமாவாக்கி, பாராட்டு பெற்றவர். இதில் புதுமுகம் கலைச்சோழன் திருவள்ளுவராகவும், புதுமுக தன லட்சுமி வாசுகியாகவும் வருகிறார்கள். இதை விட முக்கியமாக பல படங்களில் காமெடியனாக நடித்த கொட்டாச்சி, புலவர் பெருந்தலை சாத்தனாராக வருகிறார். இயக்குனர் சுப்ரமணியம் சிவா, நக்கீரராக நடித்துள்ளார். தங்கள் கெட்அப் போட்டோக்களை இவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
