தமிழில் பராசக்தி, கராத்தே பாபு, ப்ரோ கோட் போன்ற படங்களில் நடித்துவரும் ரவி மோகன், தற்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் பிஸியாக செயல்பட்டு வருகிறார். இயக்குனராக தனது முதல் படத்தை யோகி பாபுவை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து ஆர்டினரி மேன் பெயரில் படத்தை இயக்கி வருகிறார்.

இதேசமயம், 2023ல் வெளியான குறைந்த பட்ஜெட்டில் பாண்டியர் காலத்தை மையப்படுத்தி தரணி ராசேந்திரன் இயக்கிய யாத்திசை படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.
தற்போது அவருடைய இயக்கத்தில் அடுத்த படத்தில் ரவி மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுவதோடு, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.