Monday, February 3, 2025

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குகிறாரா ‘மனிதன்’ பட இயக்குனர்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், இறைவன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் அஹமத். இவரது கடைசி திரைப்படமான ‘இறைவன்’ பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு, அவர் புதிய படம் எதையும் அறிவிக்கவில்லை.

இந்த இடைவெளியில், அவர் இயக்குநர் ரவி மோகனுடன் ‘ஜன கண மன’ என்ற புதிய படத்தை இயக்கிவந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், அந்தப் படம் தொடர்பான எந்த தகவலும் அதன் பிறகு வெளிவரவில்லை.

இந்நிலையில், அஹமத் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு புதிய கதையை கூறியதாகத் தகவல் கிடைத்துள்ளது. அந்தக் கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்ததால், இதில் நடிக்க அவர் சம்மதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.தற்போது, சிவகார்த்திகேயன் இயக்குநர் முருகதாஸ், சிபி சக்ரவர்த்தி ஆகியோருடன் ஒரு படத்தில், மேலும், சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News