தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு, ‘லவ் டுடே’ என்ற படத்தில் இயக்கியும் நடிகனாகவும் செயல்பட்டு நல்ல வரவேற்பை பெற்றார். அதன் தொடர்ச்சியாக விக்னேஷ் சிவன் இயக்கும் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்துவிட்டார்.

இவரது நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். தற்போது பிரதீப் ரங்கநாதன், சுதா கொங்கராவின் உதவியாளராக பணியாற்றிய கீர்த்திஸ்வரன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘டூட்’ என்ற இந்தப் படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார். இந்த புதிய படத் தொடர்பாக இயக்குநர் பிரேம்குமார், பிரதீப் ரங்கநாதனை அணுகியதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்துக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் மீண்டும் தானே இயக்கி ஒரு படத்தை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.