விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ‛96’ திரைப்படத்தை இயக்கியவர் பிரேம் குமார். அதன் பிறகு, அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி நடிப்பில் ‛மெய்யழகன்’ படத்தை இயக்கினார். இந்த நிலையில், மீண்டும் விஜய் சேதுபதி, திரிஷா இருவரும் நடிக்கும் ‛96’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் என ஏற்கனவே அவர் கூறியிருந்தார்.

எனினும், சமீபத்தில், ‛96’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கப்போவதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் 96 – 2 படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவில்லை அவருக்கு கூறியது வேறுகதை என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பிரேம் குமார் ஒரு திரில்லர் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான கதையை எழுதியுள்ளார். சமீபத்தில் பாடகி சின்மயி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பிரேம் குமாரிடம் அவர் உங்களின் அடுத்தபடங்களை குறித்த கேள்விக்கு ஒரு த்ரில்லர் கதையை உருவாக்கியுள்ளேன் என்று தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர்களுக்கிடையே இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.