அதர்வா நடிப்பில் கடந்த ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டி.என்.ஏ’. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மதுரை சென்ற அதர்வா அங்குள்ள செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘பராசக்தி’ படத்தின் பற்றிய அப்டேட்டை அவர் பகிர்ந்துள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில் பராசக்தி படப்பிடிப்பு முடிந்துவிடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதன்பின், ஒரு செய்தியாளர் விஜயகாந்த்-ஐ போல் முரளி அவர்களை ஏ.ஐ மூலம் படங்களில் மீண்டும் கொண்டுவரும் வாய்ப்பு உள்ளதா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அதர்வா, அதற்காக ஒரு சரியான ஸ்கிரிப்ட் இருக்க வேண்டியது அவசியம். தற்போது அந்த மாதிரி எந்த திட்டமும் இல்லை. எதிர்காலத்தில் அப்படி ஒரு வாய்ப்பு ஏற்படுமா, ஏற்படாதா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.