Friday, October 18, 2024

நடனம் ஆடுவதை தவிர்க்க காலை முறித்துக் கொள்ளலாம் என நினைத்தேன்… தலைநகரம் பட நாயகி சொன்ன பகீர் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“தலைநகரம்” மற்றும் “நான் அவன் இல்லை” போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மலையாள நடிகை ஜோதிர்மயி, “அன்வர்,” “பிலால்” உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அமல் நீரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த ஜோதிர்மயி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ள “போகன்வில்லா” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை ஜோதிர்மயியின் கணவர் அமல் நீரத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திற்காக வேறு நடிகையை தேடாமல், தனது மனைவியையே நடிக்க வைக்க முடிவு செய்ததாக அமல் நீரத் கூறியுள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக ஜோதிர்மயி தலையை மொட்டையடிக்க வேண்டியிருந்தாலும், அதற்கும் அவர் தயங்கவில்லை. ஆனால், படப்பிடிப்பில் நடன காட்சிகளில் பயம் ஏற்பட்டதாகவும், நீண்ட நாட்களாக நடனம் ஆடவில்லை என்பதாலும் உடற்பயிற்சியில் ஒரு இடைவெளி ஏற்பட்டதாகவும் ஜோதிர்மயி கூறியுள்ளார்.

நடனம் ஆடுவது குறித்து எழுந்த பயத்தில், “நடனம் ஆடும்போது கீழே விழுந்து, ஒரு கால்லை முறித்துக் கொள்ளலாம்” என்ற அளவுக்கு யோசித்ததாக ஜோதிர்மயி கூறியுள்ளார். இருப்பினும், நடன இயக்குனரின் பயிற்சியினால் கடைசியில் அவர் நல்லவாறு சமாளித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News