Thursday, October 10, 2024

சினிமாத்தனமாக ஸ்டன்ட் காட்சிகள் இருக்கக்கூடாது என்று நான் சொல்லிதான் அனுப்பினேன் – அமரன் குறித்து கமல்ஹாசன் ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் “அமரன்”. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் “முகுந்தன்” என்ற ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

“அமரன்” திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வரும் 31-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம், ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

“ஹே மின்னலே” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும், இப்படத்தின் டிரெய்லர் அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகும் என்றும், அதே நாளில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறும் என தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தின் அறிமுக விழா சில வாரங்களுக்கு முன்னால் நடந்தது. அந்த நிகழ்வின் படக்குழுவின் உரையாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. அதில் ஒரு காணொளியில் இப்படம் குறித்து பகிர்ந்த நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட்-ல் சில படங்கள் உள்ளன ஆனால் ஏன் தமிழில் இது போன்ற படங்களை நாம் இயக்க முடியவில்லை என்று தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு படத்திற்கும் தனித்தனியாக நடிகர்கள் இயக்குனர்கள் என ஆய்வு செய்து செய்கின்றனர். இது அமரன் படத்தில் கூட கண்காட்சிகள் சினிமா தனமாக இருக்கக் கூடாது என நான் சொல்லி தான் இவர்களை அனுப்பினேன். முன்னாள் கர்னல் ஒருவரின் துணையோடு சன் காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளன என்றார் மேலும் பல தகவல்களை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் பகிர்ந்துக் கொண்டார்.

- Advertisement -

Read more

Local News